Posts

Short Story Review Contest -2023 - முடிவுகள்

Image
              குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி - 2023 ,   முடிவுகள்                                                                                                                                1 ஆம்பரிசு   முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா                                  ரூபா 30,000    காத்தான்குடி- 06 இலங்கை 2 ஆம்பரிசு   ஜூனியர் தேஜ் ,   வரதராஜன்                                ரூபா 25,000      சீர்காழி , தமிழ்நாடு 3 ஆம்பரிசு   ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்                                 ரூபா 20,000    காத்தான்குடி- 5 இலங்கை 4 ஆம்பரிசு   பர்வின் பானு. எஸ்                                  ரூபா 15,000 தேனாம்பேட்டை , சென்னை 5 ஆம்பரிசு   கலாதர்ஷினி குகராஜா                               ரூபா 10,000    நுஹேகொடை , இலங்கை                                                                                     20   பாராட்டுப்   பரிசுகள் - தலா ரூபா 5000                                          1. திருப்பதி. தீ ,   புதுக்கோட்டை , தமிழ்நாடு

சிறுகதை திறனாய்வுப் போட்டி - 2023

Image
   உங்கள் திறமைக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 150,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’  நடத்தும்  உலகளாவிய திறனாய்வுப் போட்டி - 2023 தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி. 15 பரிசுகள், மொத்தம் 150,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும். முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள்   –  30,000. இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் –  25,000. மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள்  -  20,000. நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   -  15,000. ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   -  10,000. 10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000. குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி . குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1500 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட்

Best Short Story selection - 2022

Image
  சிவசங்கரி - குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022   சுரேஷ் ராஜகோபால்   எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” – திண்ணை 27 நவம்பர் 2022  கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்! நவம்பர் மாதம் 2022ல் வந்த வாராந்திர, மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல. இந்த நவம்பர் மாதம் 2022ல், 69 சிறுகதைகள் தேர்விற்கு வந்தன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சுவை அல்லது சிறப்பம்சம் இருக்கின்றன. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தன. குறையாகத் தெரியவில்லை. நவம்பர் மாதக்  கதைகளை படித்ததில் கவனித்த சில விஷயங்கள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையைக்  கொடுத்தது. இரண்டு கதைகள் முழுவதும் நகைச்சுவை கதைகள் – (நந்து சுத்து எழுதிய “மரு பெயர்ச்சி”, இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை”) இரண்டு கதைகள் நிலையாமை, அதாவது இறப்பு, பற்றிய செய்திகளை கதை முழுவதும் பேசுகின்றன. யாரும் விரும்பி படிக்கும் வகையில் எல்லாக் கதைகளுமே இருக்கிறன்றன. கதைகளில் சமூக

Redwine - Story by: Kuru Aravinthan

Image
 

Story - வாய்மையின் இடத்தில்..!

Image
  Story by: kuru Aravinthan வாய்மையின் இடத்தில்.. நன்றி: விகடன் குரு அரவிந்தன்   தொலைபேசி கொஞ்சநேரமாக அலறிக்கொண்டிருந்தது. சாதாரணமாகக் கிணுகிணுக்கும் தொலைபேசி கூட இப்போதெல்லாம் அலறுவது போலத்தான் இந்த வீட்டில் கேட்கிறது.  கொஞ்ச நாட்களாக யாராவது துக்கம் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். புரொபஸர் சிவராமன் மெல்ல எழுந்து வேண்டாவெறுப்பாகத் தொலைபேசியை எடுத்தார். யாராய் இருக்கும்? என்ன செய்தியாய் இருக்கும்? இப்படித்தான் அன்றும் தொலைபேசி அலறியது. அவரது மகன் சாலைவிபத்தில் இறந்து போன செய்தி தொலைபேசியில் இடியாய் வந்து விழுந்தது. அன்று அந்த அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டு உடைந்துபோனவர் அந்தத் துயரத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை. அவரால் மீளவும் முடியவில்லை. அவரது குடும்பத்திற்குத் தெரிந்த பலர் நேரே வந்து துக்கம் விசாரித்தார்கள். சிலர் தொலைபேசியில் விசாரித்தார்கள். அவன் பிரிந்து விட்டான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கனவுபோல எல்லாமே முடிந்து விட்டது.  தூண்போல இருந்தவனே போய்விட்டான் இனி யார் துக்கம் விசாரித்தென்ன விட்டென்ன என்ற விரக்தியில் தான் அவர் இருந்தார். ‘ஹலோ!’ ‘மே ஐ ஸ்பீக்