Posts

Showing posts from February, 2021

Writer Kuru Aravinthan

Image
  kurufanclub@gmail.com  ‘அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில்,  கொப்புலுப்பிப் பூச்சொரியும் குடைவாகை’,  குரு அரவிந்தனின் வெற்றிகளுக்கும் நாலு  மலர் சூட்டி வரவேற்று நிற்கிறது.  -கோகிலா மகேந்திரன்- https://canadiantamilsliterature.blogspot.com/ Books and CDs குரு அரவிந்தன் வாழி! வாழி! மிகஅதிகம் விலையாகும் தமிழ்நாட்டின் ஏடுகளாம் விகடன்குமு தம்,கல்கி, மேலும் கலை மகள்தம்மில் இலட்சேர்ப இலட்சமாம் இரசிகமனங் கள்அறிய இலக்கியங்கள் தம்மில்எம் ஈழத்தமிழ் மக்கள்படும் இன்னல்களை எல்லாம்தன் இதயஞ்சொட்டுங் குருதி தன்னையே மையாக்கித் தருகின்றார் கதை,கதையாய்! - புண்டிதர் சா.வே. பஞ்சாட்சரம்- Kuru Aravinthan - Tamil Paarvai - Canada குரு அரவிந்தன் வாழி! வாழி! வாழ்வோடும் வனப்போடும் விருந்தாகப் பயணம் தாழ்வோடும் தரணியிலே தரமாகக் கருத்தூன்ற ஆழ்ந்தகன்ற வரலாற்று அத்தியாயம் புதிதாக வீழ்புனலாய் தருகின்றார் விரைவாக அரவிந்தனே! -த. சிவபாலு- Kuru Aravinthan - Gnanam 206 - Srilanka ஆச்சரியம் தரும் ஏழுத்தாளர். Kuru Aravinthan - Gnanam 229 - Srilanka ....................................................................

SAMPLE REVIEW - சொல்லடி உன் மனம் கல்லோடி?

Image
 Sample Review நூல் திறனாய்வு: சொல்லடி உன் மனம் கல்லோடி? கோவிட் - 19 பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாத ஒரு சூழ்நிலையில் சில மாதங்கள் வாழப்பழகிக் கொண்டு விட்டோம். ஓய்வாக இருப்பதால் தொலைக்காட்சியையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிராமல், வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பிக்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன் வாங்கிக் கவனமாக வைத்திருந்த நாவல் ஒன்று கண்ணில் பட்டது. ரொறன்ரோவில் உள்ள முருகன் புத்தகசாலைக்குச் சென்ற போது, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தப் புதினத்தின் அட்டைப்படம்தான் என்னை முதலில் கவர்ந்திழுத்தது. கிராமிய நடன உடையுடன் தலை குனிந்தபடி காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டிருக்கும் அழகான ஒரு இளம் பெண்ணின் அற்புதமான காட்சி அட்டையை அலங்கரித்திருந்தது. தெரிந்த முகம்போல இருந்ததால், புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன், புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்து தமிழ் இசையில் மட்டுமல்ல, பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கும் செல்வி ‘ஐஸ்வர்யா’ என்ற பல்கலைக்கழக மாணவிதான் அட்டைப் படத்தை அலங்கரித்திருந்தார் என்று தெரியவந்த போது, எனக்கு மேலும் வியப்பைத் தந்தது. சென்னை, மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டிருக்க

REVIEW - Sample Stories

Image
  இதுதான் பாசம் என்பதா ..  - சிறுகதை நூல் ஆய்வு. (ஆக்கம்- சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்)  ஈழநாடு பத்திரிகையில் ‘அணையாத தீபம்’ என்ற சிறு கதையினை எழுதி எழுத்துத் துறையில் நுழைந்த குரு அரவிந்தன் கனடிய மண்ணில் காலடி பதித்த பின் எழுதிய எழுத்துக்களே அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது எனலாம். ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, நந்தவனம், உயிர்நிழல், ரோஜா, தமிழோசை போன்ற சஞ்சிகைகளிலும், உதயன், நம்நாடு, ஈழநாடு, வெற்றமணி, புதினம், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும் எழுதிய ஒரு அனுபவம்மிக்க எழுத்தாளளரான இவர் இதுவரை நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் போட்டிகளில் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கின்றார். 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் இவருக்கு உலகளாவிய வாசகர்களைத் தேடிக் கொடுத்திருக்கின்றன. வேற்று மொழிகளில் மொழி பெயர்ப்புப் பொற்று வரும் இவரது கதைகள் சர்வதேசரீதியாக லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. ஏற்கனவே ‘என் காதலி ஒரு கண்ணகி’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற நாவலையும் வெளியி

NEXT - DOOR BOY - English Story

Image
                                                                                                                         Next door boy                                                  Kuru Aravinthan               I heard the doorbell. As I opened the door and looked out, I saw an eight-year-old boy standing at the entrance. There was vibrancy in his face. “Nikki T-shirt”, Naikki shoes, Nikki cap, everything was Nikki. He was wearing his cap with the front side back.             “Yes, may I help you?” I said             “Hai! I am Christopher. We are going to be your neighbours”, he showed the house by hand. When I peeped out, I saw household goods being unloaded from a vehicle. “Hai! I am Siva.   Glad to meet you !!” “Dad!” from my entrance itself he shouted. A person roughly 35 years of age came up. “Meet my Dad. Dad, he is Mr. Siva said” Christopher. I said “Hai” and shook hands.           “I am Mike. We are your new neighbours. So, pleased to meet you. Shall meet you late