Posts

Showing posts from December, 2022

சிறுகதை திறனாய்வுப் போட்டி - 2023

Image
   உங்கள் திறமைக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 150,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’  நடத்தும்  உலகளாவிய திறனாய்வுப் போட்டி - 2023 தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி. 15 பரிசுகள், மொத்தம் 150,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும். முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள்   –  30,000. இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் –  25,000. மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள்  -  20,000. நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   -  15,000. ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   -  10,000. 10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000. குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி . குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1500 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட்

Best Short Story selection - 2022

Image
  சிவசங்கரி - குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022   சுரேஷ் ராஜகோபால்   எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” – திண்ணை 27 நவம்பர் 2022  கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்! நவம்பர் மாதம் 2022ல் வந்த வாராந்திர, மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல. இந்த நவம்பர் மாதம் 2022ல், 69 சிறுகதைகள் தேர்விற்கு வந்தன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சுவை அல்லது சிறப்பம்சம் இருக்கின்றன. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தன. குறையாகத் தெரியவில்லை. நவம்பர் மாதக்  கதைகளை படித்ததில் கவனித்த சில விஷயங்கள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையைக்  கொடுத்தது. இரண்டு கதைகள் முழுவதும் நகைச்சுவை கதைகள் – (நந்து சுத்து எழுதிய “மரு பெயர்ச்சி”, இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை”) இரண்டு கதைகள் நிலையாமை, அதாவது இறப்பு, பற்றிய செய்திகளை கதை முழுவதும் பேசுகின்றன. யாரும் விரும்பி படிக்கும் வகையில் எல்லாக் கதைகளுமே இருக்கிறன்றன. கதைகளில் சமூக