Posts

Showing posts from June, 2021

2021 Review Contest - 4th Prize Winner

Image
    (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி  நான்காவது பரிசு  பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)                     குரு அரவிந்தனின் சிறுகதைகளில்  நவீன பெண் பாத்திரங்களின் வகிபாகம் பெ. ஸ்ரீகந்தநேசன், யாழ்ப்பாணம், இலங்கை. முகவுரை:- தமிழ்ப் புனைகதை இலக்கிய உலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பதித்து வருபவர் குரு அரவிந்தன், ஆவார். இவரது சிறுகதைகளில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. சிறுகதைகளில் வலம் வரும் பாத்திரங்களில் பெண் பாத்திரங்கள் தனி இடம் பெறுகின்றன. இலக்கிய வடிவங்களில் இன்று வரை மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டு – நேசிக்கப்பட்டு – வருவது சிறுகதை இலக்கியம் ஆகும். பல்துறை ஆளுமையை உடைய குரு அரவிந்தன் அவர்களின் ஆனந்தவிகடனில் வெளிவந்த, ‘இதுதான் பாசம் என்பதா?’, ‘ரோசக்காரி’, ‘தொடாதே…’, ‘சார்…ஐலவ்யூ’, ஆகிய சிறுகதைகளில் பெண் பாத்திரங்கள் முறையே, திருமணத்தின் போது பெண்ணின் மனநிலை, நவீன யுகத்தில் பெண்ணுரிமை, வாழ்வியலில் ஏமாற்றம் அடையும் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்க

2021 Review Contest - 3rd Prize Winner

Image
  (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல்  சர்வதேச  திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி  மூன்றாவது பரிசு  பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)                       வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்   மு. முருகேஷ், வந்தவாசி, தமிழ்நாடு. ‘வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்து, பரந்து விரிந்த உலகினைப் பார்த்து எழுதுவது புதினம். வீட்டின் சாளரத்தின் வழியாக வெளியே நடப்பதைப் பார்த்து எழுதுவது சிறுகதை’ என்பார் கவிஞரும் திறனாய்வாளருமான பேராசிரியர் பாலா.     எவ்வளவு சத்தியமான உண்மையிது; விரிந்த தளத்தில் வாழ்வின் பல்வேறு சிக்கல்களைப் பற்றி விஸ்தாரமாக விவாதத்தைத் தூண்டுவதுபோல் எழுதுவதற்கு புதினம் கைகொடுக்கும். ஆனால், பத்துப் பனிரெண்டு பக்கங்களுக்குள் எழுதப்படும் சிறுகதையானது வாழ்வின் ஏதாவதொரு நிகழ்வைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்து, அதன் வழியே நம் சிந்தனைக்குள் சில கேள்விகளை எழுப்பிட முடியும். அப்படியான கேள்விகளை எழுப்பும் கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன்.     கடந்த 40 ஆண்டுகளுக்க