Details About Contest Writer Kuru Aravinthan Fan club உங்களுக்காக அதிஷ்டம் காத்திருக்கிறது - வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி. தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 13 பரிசுகள் , மொத்தம் இலங்கை நாணயம் 110,000 ரூபாய்கள் . பரிசுகள் இலங்கை நாணயத்தில் வழங்கப்படும். முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000. இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 20,000. மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000. 10 பாராட்டுப் பரிசுகள் (ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000.) பாராட்டுப் பரிசுகள் (10) மொத்தத்தொகை ரூ. 50,000. குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 4 பக...