இரவில் தெரியும் சூரியன் குரு அரவிந்தன் ‘இந்த விடுமுறைக்கு அலஸ்கா போவோமா?’ என்று வீட்டுக்குள் அடைந்து கிடைந்த மனைவி கேட்ட போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கோவிட் - 19 முடக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கண்டபடி வெளியே திரிவதைத் தவிர்த்திருந்தோம். ஆனாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட தைரியத்தில், ‘போனால் என்ன’ என்று உள்மனசு தவித்தது. மூடியிருந்த அமெரிக்க – கனடிய எல்லை திறந்ததால் கனடியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்ற அறிவிப்பும் அப்போதுதான் வந்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் அலஸ்காதான் என்பதால் அதைப்பற்றி அறிந்து கொள்ளக் கணனியில் தேடிப்பார்த்தேன். கனடாவின் வடமேற்குப் பகுதியில்தான் அலாஸ்கா இருந்தது. இன்னுமொரு விடயம் எனது கவனத்தைக் கவர்ந்தது. அது என்னவென்றால் இப்போது ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கக்கூடியளவு பணத்தைவிடக் குறைவான விலையில்தான் அந்தப்பெரிய நிலப்பரப்பை 7.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே கொடுத்து ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அன்று வாங்கியிருந்தது. இன்னும் சில காரணங்களுக்காக, அதாவது பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், இரவில் தெரியும் சூரி...
எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளை திறனாய்வு செய்ய விரும்புபவர்கள் வெவ்வேறு கருப்பொருட்களைக் கொண்ட கதைகளை எடுத்தும் திறனாய்வு செயய்யலாம். விரும்பினால் பின் வரும் முக்கிய தலைப்புகளில் அவற்றை அணுகலாம். 1. சமூக, குடும்பக் கதைகள். 2. சங்க இலக்கியம் சார்ந்த கதைகள். 3. போர்க்காலச் சூழல் கதைகள். 4. காதல் கதைகள். 5. கொரோனா காலக் கதைகள். 6. பெண்ணியம் சார்ந்த கதைகள். 7. அறிவியல் கதைகள். 8. வெளிநாட்டுக் கதைகள் உங்கள் எழுத்தாற்றலைக் காட்டுங்கள். முடிவு திகதி 31-3-2025 பின் வரும் இணையத்திலும் குரு அரவிந்தனின் சிறுகதைகளை வாசிக்கலாம். மின்னஞ்சல்: kurufanclub@gmail.com இணையம்: https://kurunovelstory.blogspot.com/ http://tamilaram.blogspot.com/ https://canadiantamilsliterature.blogspot.com/ https://www.sirukathaigal.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/
ஏங்கித்துவளும் கொடியொன்று..! குரு அரவிந்தன் காதலர் உழையராகப் பெரிது உவந்து சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற, அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலம்பு இல் போலப் புல்லென்று அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே. ‘நிலா, நிலா..!’ வாசலில் நின்று குரல் கொடுத்தாள் ரதி. குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த நிலா, பக்கத்து தெருவில் வசிக்கும் ரதி வாசலில் நிற்பதைக் கண்டாள். இரண்டோ மூன்று முறை கோயிலில் சந்தித்ததால் சினேகிதமாகியிருந்தாள். ‘என்ன ரதியக்கா? உள்ளே வாங்கோ!’ ‘நாய் குரைக்குது, கடிக்குமா?’ ‘இல்லையக்கா, கட்டியிருக்குது, தெரியாதவையைக் கண்டால் குரைக்கும், அவ்வளவுதான்!’ ரதி கேற்ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். ‘குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவினம்..!’ ‘நீங்கள் இதை சொல்லுறீங்க, போனகிழமை அவர் பயணத்தால வீட்டை வரேக்கையும் அவரை வாசல்ல கண்டிட்டு, யாரோ என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டுது..!’ பெரிய காணியின் நடுவே கட்டப்பட்ட பெரியகல்வீடு பார்ப்தற்கு அழகாக இருந்தது. வீட்டின் இரு பக்கமும் சோலை போல வாழை, மா, பலா என்று பழமரங்களால் நிறைந்திருந்தது. முன்பக்கத்தில...
Comments
Post a Comment