Posts

Category of Stories for Review.

Image
  குரு அரவிந்தனின் கதைகளை பின் வரும் பகுதிகளாகப் பிரிக்க முடியும்.  இதில் ஏதாவது கதைகள் பிடித்திருந்தால் ஆக்க பூர்வமான திறனாய்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.  Closing Date - 30th April 2021 சில கதைகளின் தலைப்புக்களை இங்கே தருகின்றோம்: 1)  சமூக, குடும்பம் சார்ந்த கதைகள்,    கல்கியில் வெளிந்த‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்,’  விகடனில் வெளிவந்த ‘ரோஷக்காரி,’ ‘இதுதான் பாசம் என்பதா?,’ ‘ஸார் ஐ லவ் யூ,’ ‘புல்லுக்கு இறைத்த நீர்’ ‘காதல் என்பது..!’ மற்றும் 'அப்பாவின் கண்ணம்மா' 2)  காதற்கதைகள், Valentine Stories காதற்கதைகளில் விகடனில் வெளிவந்த ‘காதல் என்பது,’ தினக்குரலில் வெளிவந்த ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ஜெர்மனி வெற்றிமணியில் வெளிவந்த ‘ஆசை முகம் மறந்து போமோ?’ கனடா உதயனில் வெளிவந்த ‘காதல்ரேகை கையில் இல்லை,’ லண்டன் புதினத்தில் வெளிவந்த ‘மீளவிழியில் மிதந்த கவிதை’ உதயனில் வெளிவந்த ‘நீயே எந்தன் புவனம்’ விகடனில் வெளிவந்த 'அவளுக்கு ஒரு கடிதம்' 3)  யாழ்ப்பாணப் பாரம்பரிய கதைகள்,  பாரிஸ் கலைக்கல்லூரி போட்டியில் பரிசுபெற்ற  ‘கனகலிங்...

நின்னையே நிழல் என்று...REVIEW

Image
  பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன் ரொரன்ரோ பல்கலைக்கழகம், ரொரன்ரோ, கனடா (எண்ணற்ற வாழ்க்கைச் சிக்கல்களையும், உள்மனத்தின் இயக்கநிலைப்பட்ட உணர்வுமோதல்களையும் இடையறாது அடிமனதில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஒர் உணர்வுச்சித்திரமே உயிருள்ள இலக்கியப்படைப்பாக நிலைக்கின்றது. குரு அரவிந்தனின் சிறுகதைகளுக்கு இது சாலப்பொருந்தும். எம்மினத்தின் வாழ்வுப் பின்னணியில் ஏற்படும் தனிமனித, சமூக, குடும்ப சிக்கல்களையும், முரண்பாடுகளையும், மனமாற்றங்கள், சமூக மாற்றங்கள் போன்றவற்றை இதய சுத்தியோடு உள்வாங்க வேண்டும் என்ற தரிசன வீச்சுடனும் கதாசிரியர் குரு அரவிந்தன் தமது கதைகளை இங்கு நெய்திருக்கின்றார். 21ம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தின் மன, தளநிலைகளை உயிர் ஊட்டத்துடன் அவர் படம் பிடித்துக் காட்டும்போது, அவரது ஆதங்கம் எழுத்துக்களில் பட்டுத் தெறித்து பரந்து ஒளி வீசுவதை இந்தக் கதைகளின் கருவிலும் கற்பனையிலும் காணக்கூடியதாக உள்ளது. இதற்காக கனடா தமிழ் இலக்கியத்திற்கு நல்லதொரு படைப்பைத் தந்த கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்களை நாம் பாராட்ட வேண்டும். - பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன். ரொரன்ரோ பல்கலைக்க...

எங்கே அந்த வெண்ணிலா? -Review

Image
  எங்கே அந்த வெண்ணிலா எந்த ஒரு படைப்பும் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி முதலில் அதன் தலைப்புக்கு இருக்க வேண்டும். எங்கே அந்த வெண்ணிலா என்று கேள்வி மூலமே வசிகரமாக வாசகர்களை உள்ளே இழுத்து விட்டார் இந்த நூலின் படைப்பாளி திரு. குரு அரவிந்தன். இங்கேயே முதல் வெற்றி அவருக்குக் கிடைத்து விட்டது. உள்ளே நுழைந்தால் படித்து முடிக்கும்வரை கொஞ்சம்கூட விறுவிறுப்பு குறையவில்லை. மிகவும் அழகாகக் கதையைக் கையாண்டு சுவை மாறாமல் பரிமாறியிருக்கின்றார். ஏந்த ஒரு படைப்புக்கும் கதாபாத்திரங்களின் குணாதியம் முக்கியம். அதை அழுத்தமாக உருவாக்கிவிட்டால், கதை தானாக நகரும். புடிப்பவர்கள் மனதில் பசை ஒட்டிக் கொள்ளும். இதை நன்றாகப் புரிந்து கொண்ட குரு அரவிந்தன் தனது படைப்பை திறம்பட உருவாக்கியிருக்கின்றார். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வார்ததைகளை இயல்பாகக் கோர்த்து யதார்த்த நடையில் கதை மாந்தர்களை வாசகர் மனதில் வாழ வைத்திருக்கின்றார். குரு அரவிந்தனின் படைப்புகள் நிறைய வரவேண்டும். சுpறந்த ஒரு எழுத்தாளனுக்கு உரிய தகுதி குரு அரவிந்தனுக்கு நிறையவே இருக்கின்றது. உலகம் போற்றும் பெரிய படைப்பாளியாக ...

Writer Kuru Aravinthan

Image
  kurufanclub@gmail.com  ‘அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில்,  கொப்புலுப்பிப் பூச்சொரியும் குடைவாகை’,  குரு அரவிந்தனின் வெற்றிகளுக்கும் நாலு  மலர் சூட்டி வரவேற்று நிற்கிறது.  -கோகிலா மகேந்திரன்- https://canadiantamilsliterature.blogspot.com/ Books and CDs குரு அரவிந்தன் வாழி! வாழி! மிகஅதிகம் விலையாகும் தமிழ்நாட்டின் ஏடுகளாம் விகடன்குமு தம்,கல்கி, மேலும் கலை மகள்தம்மில் இலட்சேர்ப இலட்சமாம் இரசிகமனங் கள்அறிய இலக்கியங்கள் தம்மில்எம் ஈழத்தமிழ் மக்கள்படும் இன்னல்களை எல்லாம்தன் இதயஞ்சொட்டுங் குருதி தன்னையே மையாக்கித் தருகின்றார் கதை,கதையாய்! - புண்டிதர் சா.வே. பஞ்சாட்சரம்- Kuru Aravinthan - Tamil Paarvai - Canada குரு அரவிந்தன் வாழி! வாழி! வாழ்வோடும் வனப்போடும் விருந்தாகப் பயணம் தாழ்வோடும் தரணியிலே தரமாகக் கருத்தூன்ற ஆழ்ந்தகன்ற வரலாற்று அத்தியாயம் புதிதாக வீழ்புனலாய் தருகின்றார் விரைவாக அரவிந்தனே! -த. சிவபாலு- Kuru Aravinthan - Gnanam 206 - Srilanka ஆச்சரியம் தரும் ஏழுத்தாளர். Kuru Aravinthan - Gnanam 229 - Srilanka ..........................................

SAMPLE REVIEW - சொல்லடி உன் மனம் கல்லோடி?

Image
 Sample Review நூல் திறனாய்வு: சொல்லடி உன் மனம் கல்லோடி? கோவிட் - 19 பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாத ஒரு சூழ்நிலையில் சில மாதங்கள் வாழப்பழகிக் கொண்டு விட்டோம். ஓய்வாக இருப்பதால் தொலைக்காட்சியையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிராமல், வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பிக்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன் வாங்கிக் கவனமாக வைத்திருந்த நாவல் ஒன்று கண்ணில் பட்டது. ரொறன்ரோவில் உள்ள முருகன் புத்தகசாலைக்குச் சென்ற போது, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தப் புதினத்தின் அட்டைப்படம்தான் என்னை முதலில் கவர்ந்திழுத்தது. கிராமிய நடன உடையுடன் தலை குனிந்தபடி காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டிருக்கும் அழகான ஒரு இளம் பெண்ணின் அற்புதமான காட்சி அட்டையை அலங்கரித்திருந்தது. தெரிந்த முகம்போல இருந்ததால், புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன், புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்து தமிழ் இசையில் மட்டுமல்ல, பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கும் செல்வி ‘ஐஸ்வர்யா’ என்ற பல்கலைக்கழக மாணவிதான் அட்டைப் படத்தை அலங்கரித்திருந்தார் என்று தெரியவந்த போது, எனக்கு மேலும் வியப்பைத் தந்தது. சென்னை, மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்டிர...

REVIEW - Sample Stories

Image
  இதுதான் பாசம் என்பதா ..  - சிறுகதை நூல் ஆய்வு. (ஆக்கம்- சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்)  ஈழநாடு பத்திரிகையில் ‘அணையாத தீபம்’ என்ற சிறு கதையினை எழுதி எழுத்துத் துறையில் நுழைந்த குரு அரவிந்தன் கனடிய மண்ணில் காலடி பதித்த பின் எழுதிய எழுத்துக்களே அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது எனலாம். ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, நந்தவனம், உயிர்நிழல், ரோஜா, தமிழோசை போன்ற சஞ்சிகைகளிலும், உதயன், நம்நாடு, ஈழநாடு, வெற்றமணி, புதினம், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும் எழுதிய ஒரு அனுபவம்மிக்க எழுத்தாளளரான இவர் இதுவரை நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் போட்டிகளில் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கின்றார். 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் இவருக்கு உலகளாவிய வாசகர்களைத் தேடிக் கொடுத்திருக்கின்றன. வேற்று மொழிகளில் மொழி பெயர்ப்புப் பொற்று வரும் இவரது கதைகள் சர்வதேசரீதியாக லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. ஏற்கனவே ‘என் காதலி ஒரு கண்ணகி’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என...